7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தீ வைத்து கொளுத்திய கொடூர மிருகம்...!
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தீ வைத்து கொளுத்திய கொடூர மிருகம்...!
7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வரும் தனது பாட்டியுடன் தங்கி வசித்து வருகிறார்.
இவரது தாய் வேறு ஒருவருடன் திருமணமமாகி குழந்தையை விட்டுவிட்டு சென்றதால் அவரது பாட்டியுடன் தங்கியுள்ளார். தனது பாட்டியுடன் அங்கன்வாடிக்கு சென்றிருந்த சிறுமி, அங்கன்வாடி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, உடலில் திடீரென தீப்பற்றி எரியும் நிலையில் ஓடி வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியின் மீது எரிந்த தீயை அணைத்தனர்.
இதன் பின்பு சிகிச்சைக்காக அந்த சிறுமி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரனை மேற்கொண்டனர்.
விசாரணையில், விஜயகுமார் (20) என்ற இளைஞர் சிறுமியை விளையாட அழைத்து செல்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்வதற்காக ஆடையில் தீ வைத்துவிட்டுதப்பி ஓடியதாக கூறியுள்ளார். இது குறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விஜயகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறயிலடைத்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362