×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காவல் நிலையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை... தலைமை காவலர் சஸ்பெண்ட்.!

காவல் நிலையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை... தலைமை காவலர் சஸ்பெண்ட்.!

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 68 வயது மூதாட்டிக்கு தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி பணியிலிருந்த போது மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
அப்போது தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணியிடம் போதையில் இருந்த காவலர் அவரது பொய்களை பிடுங்கி பாலியல் தொந்தரவு செய்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாளிடம் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் இன் பார்வைக்கு இந்த புகார் சென்றது. இச்சம்பவத்தில் விசாரணை நடத்திய போது செல்வகுமார் தினமும் மது குடித்துவிட்டு பணிக்கு வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மூதாட்டி இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செல்வக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnau #Tuticorin #sexual abuse #Police station #suspended
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story