×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பு.. ராமஜெயம் கொலை வழக்கில் இன்று ஆஜராக இருந்த ரவுடி.. வெட்டி சாய்த்த 4 பேர் கொண்ட கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

பரபரப்பு.. ராமஜெயம் கொலை வழக்கில் இன்று ஆஜராக இருந்த ரவுடி.. வெட்டி சாய்த்த 4 பேர் கொண்ட கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

Advertisement

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த பிரபு (எ) பிரபாகரன் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு தனது அலுவலகத்தில் இருந்த பிரபுவை முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் வந்த 4  பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் பிரபு இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து நிகழ்விடத்திலேயே பலியானார். 

இதனையடுத்து இந்த சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை வளையத்திற்குள் இருந்த பிரபு விசாரணைக்கு வருமாறு இன்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rowdy murder #Gang attacked #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story