×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்.! மனப்பூர்வமாக நன்றி தெரிவித்த சீமான்.!

தமிழகத்தில் தைப்பூசத் திருநாளில் அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

தைப்பூசத் திருவிழாவுக்கு பல நாடுகளில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே போல், தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவுக்கு பொது விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. இந்தநிலையில், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், இந்து அமைப்பினர் உட்பட தமிழர்க்ள பலர் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமானும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன் முப்பாட்டன் முருகப் பெருந்தகையைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அரசுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #NTK
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story