சசிகலாவை சந்தித்து சீமான் என்ன பேசினார்.? முதன் முறையாக உண்மையை உடைத்த சீமானின் வீடியோ.!
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறை தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பிய சசிகலாவை, ஜெயலலிதா
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறை தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பிய சசிகலாவை, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று இயக்குனர் பாரதிராஜா, அமீர், சரத்குமார், சீமான் ஆகியோர் திடீரென்று சந்தித்து பேசினார்கள். அந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
சசிகலாவை சந்தித்த சரத்குமார், பாரதிராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், ஆனால் சீமான் மட்டும் செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்தார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பல கோணங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமானிடம் இதைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், எங்கள் இருவருக்குள் பேசிய விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டியதில்லை. அதன் காரணமாகவே அதை நான் சொல்ல விரும்பவில்லை. எடப்பாடியாருக்கும், சசிகலாவிக்கும் சமரசம் செய்து வைக்க முயன்றீர்களா என்ற கேள்விக்கு சீமான், நான் வேண்டும் என்றால் பேசி பார்க்கவா என்று சசிகலாவிடம் கேட்டேன். அதற்கு சசிகலா சரி பேசி பாருங்கள் என்றார், ஆனால் நாங்கள் தான் சந்திக்கவேயில்லையே என்று சீமான் பதில் அளித்தார்.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதன் முடிவு குறித்து கேட்ட போது, இதில் எனக்கு விருப்பமில்லை, அவரை மீண்டும் சந்தித்தால் ஏன் இப்படி ஒரு அவசர முடிவை எடுத்தீர்கள் என்று கேட்பேன். சசிகலா விரும்பியது, அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருந்து சேர்ந்து செய்ய வேண்டும், ஜெயலலிதா இத்தனை ஆண்டுகள் காத்து வந்த இந்த அதிமுக, இப்படி பிரிந்து இருப்பது நன்றாக இல்லை என்று வேதனைப்பட்டார் என தெரிவித்தார் சீமான்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362