தேர்தல் வாக்குறுதியில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம்! சீமான் கொடுத்த வாக்குறுதி!
Seeman talk about election statement
மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம் எனத் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்தவர்களுக்கான மாவீரர் நினைவு நாள் மதுரையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், நாம் தமிழரை விட்டால் தமிழகத்துக்கு நாதி கிடையாது. ஏனெனில் எங்களைவிட இந்த மண்ணின் மக்களை நேசிப்பவர்கள் உலகத்திலேயே கிடையாது. ஏதாவது செய்து மேலே வந்துவிடுங்கள் என நண்பர்கள் சிலர் என்னிடம் கூறுகின்றனர்.
ஆகையால் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்பதாக அறிக்கை வெளியிடவுள்ளோம். சீமான் கார் தருகிறார் என்று அனைவரும் எனக்கு வாக்களித்துவிடுவர். வெற்றி பெற்ற பின் ஒவ்வொரு வீடாகச் சென்று கார் என்று சொல்லி ஒரு படத்தைக் காண்பிப்பேன். இவர்தான் ‘அம்பேத்கார்’. இவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362