இரண்டாவது திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற முதல் மனைவி.! ஓகே சொன்ன கணவன்.! அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் நாம
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இந்தநிலையில் திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டார் சிந்தாமணி.
சிந்தாமணி பிரிந்து சென்ற சில ஆண்டுகளில் மணிவண்ணன் வேறு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் தாய் வீட்டில் வசித்துவந்த சிந்தாமணியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தாயும் இறந்து விட்டார்.
இந்தநிலையில், நேற்று மாலை சிந்தாமணி அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்தாமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362