×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டாவது திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற முதல் மனைவி.! ஓகே சொன்ன கணவன்.! அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் நாம

Advertisement

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. 

இந்தநிலையில் திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே  கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டார் சிந்தாமணி.
சிந்தாமணி பிரிந்து சென்ற சில ஆண்டுகளில் மணிவண்ணன் வேறு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் தாய் வீட்டில் வசித்துவந்த சிந்தாமணியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தாயும் இறந்து விட்டார்.

இதனால் சிந்தாமணியின் உறவினர்கள் இனி, நீ கணவர் வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்க்கை நடத்து என்று கூறியுள்ளனர். இதனையடுத்து சிந்தாமணி தனது 4 வயது மகனை அழைத்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனாலும் மணிவண்ணன், சிந்தாமணியை ஏற்று அந்த பகுதியில் ஒரு வீடு பார்த்து குடிஅமர்த்தினார்.

இந்தநிலையில், நேற்று மாலை சிந்தாமணி அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்தாமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#second wife #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story