என்ன கொடுமை! மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த பள்ளி ஆசிரியை; வெளியான அதிர்ச்சி சம்பவம்.!
school teacher - sex tourcher - thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் உமேஷ் குமார்-நித்யா தம்பதியினர். இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நித்தியா அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பணி புரிந்துள்ளார். மேலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக டியூசன் வகுப்பும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் பயிலும் மாணவர் ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்த அவர் நாளடைவில் உல்லாசம் அனுபவிக்கும் அளவிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் அவரை அருகிலுள்ள செங்கம் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.
அங்கேயும் ஒரு மாணவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த உமேஷ் குமார் அவரது செல்போனை பரிசோதனை செய்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.
ஏனெனில் உல்லாசம் அனுபவித்தது மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து அவ்வப்போது பார்த்து ரசித்துள்ளார். இதனால் மனைவியை விட்டு தனியாக வாழ்ந்து வந்தார் உமேஷ் குமார்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற உமேஷ் குமார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கந்தசாமியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆசிரியை நித்யாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362