×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருதுநகரில் பரபரப்பு.. கண்டித்த ஆசிரியரை வழிமறித்து அரிவாளால் தாக்கிய மாணவர்கள்.!

விருதுநகரில் பரபரப்பு.. கண்டித்த ஆசிரியரை வழிமறித்து அரிவாளால் தாக்கிய மாணவர்கள்.!

Advertisement

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் எஸ்ஆர்என் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பொருளாதாரப் பிரிவு ஆசிரியராக கடற்கரை என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்துள்ளார்.

இதனால், அந்த 2 மாணவர்களும் ஆசிரியர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஆசிரியர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழிமறித்த மாணவர்கள் இருவரும் தங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் அவர் தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பியோடி உள்ளனர்.

இதனிடையே ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆசிரியர் கடற்கரையை மீட்டு சிகிச்சைக்காக திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் மாணவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து தனித் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் 11 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு தனிப்படை அமைத்து ஆசிரியரை தாக்கி சென்ற மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viruthunagar #Thiruthangal #school students #teacher #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story