×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேர்வு விடைத்தாளில் பள்ளி மாணவன் எழுதியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்! அவமானத்தில் உயிரை விட்ட பரிதாபம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டத்தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற ம

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டத்தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாணவன் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் தாவரவியல் ஆசிரியர் சகாதேவன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைத்துள்ளார். இந்த தேர்வை எழுதிய கார்த்திக், தெரியாத கேள்விகளுக்குத் திரைப்படப் பாடலை பதிலாக எழுதியுள்ளார். இதையடுத்து, ஆசியர் சகாதேவன், விடைத்தாளைத் திருத்தும்போது கார்த்திக் எழுதிய பாடலை அனைத்து மாணவர்கள் முன்பும் படித்துக் காட்டி கிண்டல் செய்துள்ளார். 

மேலும், அந்த மாணவனின் அச்செயலை பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடமும் சகாதேவன் தெரிவித்துள்ளார். இதனால் அவமானமடைந்த கார்த்திக் வீட்டில் வெகுநேரம் அழுத நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அவர் சடலத்தை யாருக்கும் தெரியாமல் குடும்பத்தார் தகனம் செய்துள்ளனர். இது குறித்து கார்த்திக் பெற்றோர் புகார் கொடுக்காததால் எப்படி நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் போலீசார் குழம்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலிஸார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#student #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story