நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் பழகிக்கொண்டிருந்த சிறுவன்.! திடீரென அறுந்த கயிறு.! சோக சம்பவம்.!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிவா என்ற இளைஞன் 12 ஆம் வகுப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிவா என்ற இளைஞன் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில், சிவா நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அந்த கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் பழகிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சிவாவின் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கி மாயமாகினார். இது குறித்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362