×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஈரக்கையோடு மொபைல் சார்ஜரை கழற்ற முயன்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.!

ஈரக்கையோடு மொபைல் சார்ஜரை கழற்ற முயன்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.!

Advertisement

வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் செந்தில். இவர் கிருஷ்ணகிரி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் கோபிநாத் 4-ம் வகுப்பு படித்துவருகிறார். செந்தில் தனது மகனுக்கு பள்ளி விடுமுறை நாள் என்பதால் தனது மனைவி பானுமதி மற்றும் மகன் கோபிநாத்துடன் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று மலை செந்திலின் மனைவி பானுமதி அவரது செல்போனுக்கு சார்ஜர் போட்டுள்ளார். அப்போது குளித்துவிட்டு வந்த அவர்களது மகன் கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக கோபிநாத் மீது மின்சாரம் பாய்ந்து அலறியபடி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனைப்பார்த்து ஓடிவந்த குடும்பத்தினர் உடனடியாக கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school student #died #electric shock
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story