×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூங்காவில் போதையில் தூங்கிய தந்தையால் ஏற்பட்ட விபரீதம்.! 4 வயது சிறுமி பலாத்காரம்.! அதிர்ச்சி சம்பவம்.!

பூங்காவில் போதையில் தூங்கிய தந்தையால் ஏற்பட்ட விபரீதம்.! 4 வயது சிறுமி பலாத்காரம்.! அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

காஞ்சிபுரம் ரயில்வே சாலை பகுதியை சேர்ந்த இளம்பெண் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக நேற்று முன்தினம் இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது 4 வயது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், போதையிலிருந்த கணவர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். பூங்காவில், சிறுமி விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் போதையிலிருந்த தந்தை ஆழ்ந்து தூங்கியுள்ளார். இதனை கவனித்த 11ம் வகுப்பு படிக்கும் சிறுவன் அந்த பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமையை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

சற்று நேரத்தில் சிறுமியின் அழுகை குரலைக் கேட்டு பெற்றோர் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்து பதறிப்போன பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மாணவனை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#child #abused #park
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story