வெளுத்துவாங்கும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
school leave for heavy rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் வெப்ப சலனம் காரணாமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதில், டிசம்பர் -1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்துவருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.