×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலன் இறந்த சோகத்தில் 11ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்!

காதலன் இறந்த சோகத்தில் 11ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கல்லூரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு தேவா என்ற மனைவியும், ஒரே மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர் கல்குவாரியில் கூலி

Advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு தேவா என்ற மனைவியும், ஒரே மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர் கல்குவாரியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுடைய மகள் குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் தங்கை மகனமான தனது மாமன் சிவாவை காதலித்து வந்துள்ளார். என்ன நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி ஆந்திராவில் ஏற்பட்ட விபத்தில் சிவா உயிரிழந்துள்ளார். இதனால் மாணவி மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தனது தோழிகளிடம் சிவா இறந்து விட்டால் நான் மட்டும் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என மன வருத்தத்தில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி மாணவியை காணவில்லை. இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே ராஜசேகர் என்பவர் தனது கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மாணவியின் உறவினர்கள் அந்த சடலத்தை மீட்டனர். அது சுப்பிரமணியன் மகள் தான் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school girl suicide #Love problem #vellore #Kudiyatham #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story