×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

school girl suicide for her mom illegal affair

Advertisement


விழுப்புரம் மாவட்டம் நயினார்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி கவிதா. இவர் தனது கணவன் இறந்தநிலையில் அவரது மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அவரது மூன்று மகள்களும் அதேபகுதியில் உள்ள பள்ளியில் படித்துவந்தனர். 

இந்தநிலையில் கவிதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த ரமணா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தனிமைகவும் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் கவிதாவின் மகள்கள் பள்ளிக்கு சென்றவுடன், வீட்டில் யாரும் இல்லாதபோது கவிதா  தனது கள்ளக்காதலன் ரமணாவை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய கவிதாவின் இரண்டாவது மகள் வீட்டில் நடந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கவிதாவின் மகள் அவரது தாயை கண்டித்துள்ளார். 

 மகள் தன்னை கண்டிப்பதாக கவிதா ரமணாவிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ரமணா சிறுமியை  தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவிதாவின் மகள் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கவிதா மற்றும் ரமணாவை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school girl #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story