×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன், பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன், பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து உடனடியாக மாணவியின் பெற்றோர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி அதே கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்தது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சி சென்று திருமணம் செய்து கொண்டனர்.

திரும்ப வீட்டிற்கு சென்றால் பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று எலி மருந்து வாங்கி சாப்பிட்டு விட்டு பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எலி மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #suicide #Ratpaste #சுவாமிமலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story