×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளியே வருகிறார் சசிகலா? சந்திக்க தயாரான அமைச்சர்கள்! படுகுஷியில் அமமுகவினர்!

Sasikala will come for her brother son marriage?

Advertisement

சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

 சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை உள்ளது என தெரிவிக்கின்றனர். 4 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்கும் முன் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. சசிகலா வரும் பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து வெளியே வர உள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் திருமணம் வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்த திருமணத்தில் சசிகலா கலந்து கொள்ள கட்டாயம் வருவார் என்று சசிகலா தரப்பு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்பு சசிகலா தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போதும், அவர் உயிர் இழந்த போதும் பரோலில் வந்தார் என்பது குறிப்படத்தக்கது. இந்தநிலையில் சசிகலாவின் பரோலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sasikala #ammk #Admk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story