×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சசிகலா.! முன்ஜாமீன் வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்.!

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சசிகலா.! முன்ஜாமீன் வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்.!

Advertisement

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு சசிகலாவுக்கு பெண்கள் சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

சசிகலா சிறையில் இருந்து அடிக்கடி சாதாரண உடையில் வெளியில் சென்று வந்ததாகவும் தகவல் பரவியது. மேலும் அவர் சிறையில் கைதிகளுக்கான ஆடை அணியாமல் வழக்கமான சேலையை அணிந்து சொகுசாக வாழ்ந்தததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் விசாரணையை நடத்தாமலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்துவருவதால், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த வழக்கு கடந்த மாதம் 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும், நீதிபதி உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணை இன்னைக்கு ஒத்துக்கிவைத்தார்.

இதையடுத்து, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சம்மன் வழங்கிய நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் அனிதா, தன்மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் டாக்டர் அனிதாவிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. 

இதனையடுத்து சசிகலா உள்ளிட்ட 6 பேருக்கும் இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறைத்துறை முன்னாள் அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ மகனூருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 16-ம்தேதி சசிகலா மற்றும் இளவரசி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sasikala #Bangalore court #bail
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story