சசிகலா வந்த காரில் அதிமுக கொடி அகற்றம்.! வேறு காருக்கு மாறிய சசிகலா.!
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார்.
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
இந்தநிலையில் ஒரு வாரம் கழித்து சசிகலா பெங்களூருவில் இருந்து இன்று, பிப்ரவரி 8 ஆம் தேதி புறப்பட்டு சென்னை புறப்பட்டார். இன்று சென்னைக்கு வரவிருக்கும் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகும்போது அவர் சென்ற காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அதிமுக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சசிகலா காரில் அதிமுக கொடியை பொருத்த மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுகவினரின் எதிர்ப்பால் சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தமாட்டார் என அதிமுகவினர் எதிர்பார்த்தநிலையில், சசிகலா மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டு தமிழகம் திரும்பினார். தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டதாக வேறு காருக்கு மாறினார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362