டிக்: டிக்: டிக்: என தொடரும் சசிகலாவின் வருமான வரி துறை-இன் விசாரணை..!!
sasikala..!!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் நடைபெற்று வந்த வருமான வரித்துறையினர் விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் சசிகலாவின் உறவினா்கள் வீடு, அலுவலகங்கள், சசிகலா தொடா்பான இடங்களில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வருமான வரித்துறை அதிகாாிகள் அதிரடி சோதனை நடத்தினா்.
நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய வருமான வரிசோதனைகளில் இதுவும் ஒன்றாக பாா்க்கப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாாிகள் அனுமதி கோரினா். அதன்படி டிசம்பா் 13, 14ம் தேதிகளில் சசிகலாவிடம் விசாரணை நடத்திக்கொள்ள அதிகாாிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாாிகள் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு சிறை வளாகத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணிநேரம் இந்த நடைபெற்றது. இந்நிலையில் இன்றும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362