×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே... பிறந்து ஒரு நாளே ஆன பிஞ்சுக் குழந்தையை ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்கள்... போலீசார் தீவிர விசாரணை!!

அடக்கொடுமையே... பிறந்து ஒரு நாளே ஆன பிஞ்சுக் குழந்தையை ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்கள்... போலீசார் தீவிர விசாரணை!!

Advertisement

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள குகூட்டஅள்ளி ஊராட்சி பகுதியில் நாயக்கனூர் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் நேற்று சிலர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு பச்சிளம் குழந்தை இறந்தும் மிதந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தண்ணீரில் மிதந்த குழந்தையை கைப்பற்றி உள்ளனர். அந்த குழந்தை பிறந்து ஒரே நாள் ஆன பெண் குழந்தை என தெரியவந்துள்ளது.

அதனையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்த குழந்தையை அருகில் இருந்த பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏரியில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பதையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#New born baby #Unknown person #Throw #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story