×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து, சாலைத்தடுப்பில் மோதி விபத்து.. 19 பயணிகள் காயம்.! 

தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து, சாலைத்தடுப்பில் மோதி விபத்து.. 19 பயணிகள் காயம்.! 

Advertisement

சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து விருத்தாச்சலம் அருகே விபத்திற்குள்ளானதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாச்சலம் வழியே, சிதம்பரம் நோக்கி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அரசு பேருந்து புறப்பட்டு பயணம் செய்தது. இந்த பேருந்தில் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், பேருந்தின் ஓட்டுநராக திருநாவுக்கரசு என்பவர் பணியாற்றி இருந்தார். நடத்துனராக செந்தில் குமார் என்பவர் இருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் பேருந்து விருத்தாச்சலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் அருகே செல்கையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு இயங்கி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் சிக்கிய பேருந்து பயணிகள் அலறவே, விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தமாக 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #Chidambaram #virudhachalam #tamilnadu #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story