அம்மா நான் வாழ தான் ஆசைபட்டேன்... ஆனால் நான் சாகப் போறேன்! அவனை சும்மா விடாதீங்க! இளம் ஆசிரியை எழுதிய உறுக்கமான கடிதம்! சேலத்தில் நடந்த கொடூரம்!!!
சேலம் மகுடஞ்சாவடியில் காதலனின் மிரட்டல் மற்றும் திருமண வற்புறுத்தலால் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இளம் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காதல் உறவில் ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் தொடர்ந்த மிரட்டல் காரணமாக ஒரு இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
காதல் பிரிவு பின்னணி
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள அழகனூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சண்முகப்பிரியா என்ற தனியார் பள்ளி ஆசிரியை, கவுதம் என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் அவரது நடத்தை பிடிக்காததால், சண்முகப்பிரியா அந்த உறவை முடிவுக்கு கொண்டுவந்தார்.
மிரட்டல் மற்றும் திருமண வற்புறுத்தல்
காதல் உறவைத் துண்டித்ததைத் தொடர்ந்து, கவுதம் அவரை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், சம்மதிக்காவிட்டால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மிரட்டல் மற்றும் மனஅழுத்தம் காரணமாக சண்முகப்பிரியா கடும் உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு ஆண் வாரிசு வேணும்! போலி சாமியாரின் மூட நம்பிக்கை சடங்கால் மனைவியை கொடுமைப்படுத்தி கணவன்! சுடுகாட்டில் செய்த பயங்கரம்!
உருக்கமான கடிதம்
மன உளைச்சலைத் தாங்க முடியாமல், சண்முகப்பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், "நான் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்பட்டேன்; ஆனால் அவன் என் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். அவனைச் சும்மா விடாதீர்கள்" என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது தாயார் மற்றும் சகோதரியிடம் மன்னிப்பு கேட்டதுடன், தன்னை இந்நிலைக்கு தள்ளியவருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போலீஸ் விசாரணை தீவிரம்
இச்சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் ஆசிரியின் உயிரிழப்பு சம்பவம் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் இணைய வழி மிரட்டல்கள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க சமூக விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.