×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காவல் நிலையம் அருகேயுள்ள மரத்தில், தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சடலம்.. சேலத்தில் அதிர்ச்சி.!

காவல் நிலையம் அருகேயுள்ள மரத்தில், தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சடலம்.. சேலத்தில் அதிர்ச்சி.!

Advertisement

சேலம் பேருந்து நிலையம் அருகே, சேலம் நகரின் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அசோகா மரம் உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் மரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், விரைந்து செயல்பட்டு சடலத்தை கீழே இறக்கினர். இறந்தவரின் கைகளில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனோகரி என்று பச்சை குத்தப்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து, அடையாளம் தெரியாத நபரின் பிரேதத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், இவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #tamilnadu #hanged #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story