×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாமியார் - மருமகள் சண்டையில் பெரும் சோகம்.. 2 மகன்களை தூக்கிலிட்டு கொன்று, தாய் தற்கொலை.!

மாமியார் - மருமகள் சண்டையில் பெரும் சோகம்.. 2 மகன்களை தூக்கிலிட்டு கொன்று, தாய் தற்கொலை.!

Advertisement

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வீராணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் மனைவி குறிஞ்சி தமிழ். தம்பதிகளுக்கு விமல் என்ற 7 வயது மகனும், கார்த்திக் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். 

மாமியார் முத்தம்மாள் - மருமகள் குறிஞ்சி தமிழ் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. இதனால் வீட்டின் மேல்தளத்தில் ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று ராஜேஷ் வழக்கம்போல வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த நிலையில், மேல்தளத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மற்றும் முத்தம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #mother #children #suicide #kill #police #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story