#BigNews: லாரி - தனியார் சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து : 5 பேர் பரிதாப பலி.. சேலத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
#BigNews: லாரி - தனியார் சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து : 5 பேர் பரிதாப பலி.. சேலத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
தனியார் ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர், சென்னையை சேர்ந்த உறவினரின் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல ஆம்னி பேருந்தில் புக்கிங் செய்துள்ளனர்.
இந்த பேருந்து நேற்று இரவில் 11:30 மணியளவில் சென்னைக்கு புறப்படவே, பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து 12:45 மணியளவில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வந்துள்ளது.
அப்போது, சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி பயணம் செய்த லாரி பேருந்தின் மீது வேகமாக மோதியதில், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்ற குடும்பத்தினர் 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விபத்தில் படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362