×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தற்கொலை.. சேலத்தில் அதிர்ச்சி.!

அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தற்கொலை.. சேலத்தில் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!

Advertisement

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல், வேப்பம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தங்கவேலு. இவரின் மகன் ராமர் (வயது 40). ராமர் பெங்களூரில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

காசநோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்த ராமர், கடந்த 21 ஆம் தேதி சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இன்று காலை கழிவறைக்கு சென்ற ராமர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்தவர்கள் கழிவறைக்குள் சென்று பார்த்துள்ளனர். கதவு தாழிடப்படாமல் இருந்த நிலையில், அவர் வேஷ்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. 

இந்த தகவலை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் அரசு மருத்துவமனை காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ராமரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #govt hospital #patient #suicide #police #Investigation #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story