×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலுக்கு தந்தை எதிர்ப்பு; பெண் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம்.!

காதலுக்கு தந்தை எதிர்ப்பு; பெண் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம்.!

Advertisement

 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். மகள் திலகவதி (வயது 26). சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் அதிகாரியாக பணியாற்றுகிறார். 

திலகவதிக்கும், சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் காதல் மொழிபேசி வைத்துள்ளனர். 

இருவரின் சமூகமும் வெவ்வேறு என்பதால், திலகவதியின் தந்தை முருகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன திலகவதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

அவரை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் இன்றி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக பலியாகினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #Govt Employee #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story