#Breaking: தமிழகத்தில் மீண்டும் பேரதிர்ச்சி...! சேலம் அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி.. உயிர் ஊசல்..!
#Breaking: தமிழகத்தில் மீண்டும் பேரதிர்ச்சி...! சேலம் அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி.. உயிர் ஊசல்..!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கோகிலவாணி. இவர் இன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று இருந்த நிலையில், பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடனடியாக காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் தற்கொலை முயற்சி தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில், மாணவி குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும்., மாணவியின் தற்கொலைக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மாணவி படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362