×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டு வாசலில் கஞ்சா பிடித்த ரவுடி.. தட்டி கேட்ட உரிமையாளர் மீது பெற்றோர் குண்டு வீச்சு!

வீட்டு வாசலில் கஞ்சா பிடித்த ரவுடி.. தட்டி கேட்ட உரிமையாளர் மீது பெற்றோர் குண்டு வீச்சு!

Advertisement

சென்னை புது வண்ணாரப்பேட்டை அருகே வீட்டு வாசலில் கஞ்சா பிடித்ததை தட்டி கேட்ட உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் சிவா. புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் மனோஜ். பிரபல ரவுடியான மனோஜ் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மனோஜ், சிவா வீட்டு வாசலில் அமர்ந்து கஞ்சா புகைத்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவா இங்கெல்லாம் பஞ்சாப் புகைக்கக் கூடாது, எழுந்து செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் ஆபாச வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் மனோஜ் தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து அன்று நள்ளிரவு சிவா வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து சிவா புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய மனோஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Petrol Bomb #chennai #Puthuvannarapet #Crime #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story