×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா சமயத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை! அதிர்ச்சி சம்பவம்!

Rowdy murdered in chennai

Advertisement

சென்னை செங்குன்றத்தை அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணி என்ற கஞ்சா மணி. பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ரவுடி மணி நேற்று மாலை செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பெருமாள்கோவில் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரவுடி மணியை சுற்றி வளைத்ததுள்ளனர். இதனால் பயந்துபோன மணியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதனையடுத்து மர்ம நபர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த அரிவாளால் தனியாக சிக்கிக்கொண்ட ரவுடி மணியை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த மணி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த ரவுடி மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரவுடி மணிக்கும், எதிர்கோஷ்டியை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடி ஒருவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக மாமூல் பிரச்சினையில் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rowdy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story