மதுரையில் பிரபல ரவுடி கொலை! மர்மநபர்களின் வெறிச்செயல்!
rowdy kiled in madurai

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மீது கொலை, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பிரபல ரவுடியான முத்துக்குமார் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது முத்துக்குமாரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
திடீரென அந்த மர்ம நபர்கள் முத்துக்குமாரை கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.