×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுரையில் கொலை செய்யப்பட்ட நெல்லை ரவுடி.. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்.. பரபரப்பு .!

மதுரையில் கொலை செய்யப்பட்ட நெல்லை ரவுடி.. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்.. பரபரப்பு .!

Advertisement

மதுரையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை எஸ்பி அறிவுரையின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டின்பட்டி அருகே உள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகே ஆண் சடலம் ஒன்று கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் நெல்லை மாவட்டம் பாளையசெட்டிகுளத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் கிருஷ்ணகுமார்(30) என்று தெரியவந்தது. இவர் மீது சில கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணை தெரிவிக்கிறது. இந்நிலையில் எஸ்பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #madurai #tirunelveli #Crime #Police Enquiry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story