மதுரையில் கொலை செய்யப்பட்ட நெல்லை ரவுடி.. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்.. பரபரப்பு .!
மதுரையில் கொலை செய்யப்பட்ட நெல்லை ரவுடி.. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்.. பரபரப்பு .!
மதுரையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை எஸ்பி அறிவுரையின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டின்பட்டி அருகே உள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகே ஆண் சடலம் ஒன்று கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.