×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆசிரியை, மகனை தாக்கி வழிப்பறி! அதிர்ச்சி சம்பவம்!

robbery in pudukottai alangudi

Advertisement


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சிதம்பரவிடுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி விஜயா குளமங்கலம் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை விஜய தனது மகனுடன் சென்று புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். 

 மாவட்ட கல்வி அலுவலக த்தில் கூட்டம் முடிந்து அவர்கள் இருவரும் சிதம்பரவிடுதியை நோக்கி இருச்சக்கரவாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் பள்ளத்திவிடுதி பகுதியில் உள்ள அம்புலியாறு பாலத்தில் சென்றபோது, அங்கு நின்ற முகமூடி அணிந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர். வாகனத்தை நிறுத்தத்தால் உதைத்துள்ளனர்.

இதனால் இருவரும் நிலைதடுமாறி இருச்சக்கரவாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் அருகே வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து தலைமறைவாகினர்.

மர்மநபர்கள் தாக்கியதில் ஆசிரியையின் மகனுக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது. இதனையடுத்து காயமடைந்த நபரை கொத்தமங்கலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின்பு வீடுதிரும்பினார்.

இதனையடுத்து ஆசிரியையின் மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியையை தாக்கி பணம், நகைகள் போன்றவற்றை பறித்துச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#robbers #pudukottai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story