பெண்ணின் கழுத்தில் வெட்டிவிட்டு நகையை கொள்ளையடித்த கயவர்கள்!. திருடர்களை சிக்கவைத்துவிட்டு உயிரைவிட்ட இளம்பெண்!.
பெண்ணின் கழுத்தில் வெட்டிவிட்டு நகையை கொள்ளையடித்த கயவர்கள்!. திருடர்களை சிக்கவைத்துவிட்டு உயிரைவிட்ட இளம்பெண்!.
விழுப்புரம் மாவட்டத்தில் லதா எனும் 27 வயது நிரம்பிய இளம்பெண் நேற்று முன்தினம் தனது தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் லதாவின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துவிட்டு கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லதாவை வழியில் சென்றவர்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லதா சுய நினைவில் இருக்கும்பொழுது ஒரு பேப்பரில் தன்னிடம் நகைகளை பறித்தவர்கள் பற்றிய விவரங்களை எழுதி கொடுத்தார்.
அவர் எழுதியதின் அடையாளத்தை வைத்து போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நடந்த அனைத்தையும் ராமச்சந்திரன் என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், லதா வயலுக்கு செல்லும்பொழுது நானும், இன்னோருவரும் அங்கு சென்றோம்.
நாங்கள் லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பரிக்கும்பொழுது லதா எங்களை கடுமையாக திட்டினார். அதனில் லதாவின் கழுத்தில் வெட்டிவிட்டு செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். மேலும் இந்த கொலையில் ஈடுபட்டுள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362