×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னடா ஓவரா பேசுற... கார் மீது மோதிவிட்டு உரிமையாளரையே சரமாரியாக தாக்கிய லாரி ஓட்டுனர்... போலீசார் விசாரணை!!

என்னடா ஓவரா பேசுற... கார் மீது மோதிவிட்டு உரிமையாளரையே சரமாரியாக தாக்கிய லாரி ஓட்டுனர்... போலீசார் விசாரணை!!

Advertisement

சென்னையை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதி வேகத்தில் வந்த லாரி ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் அதிர்ஷ்ட வசமாக காரில் பயணித்தவர்களுக்கு எந்த சேதமும் ஆகவில்லை. 

ஆனால் கார் சேதம் அடைந்தது. இதனால் காரின் உரிமையாளர் லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆவேசம் அடைந்த லாரி ஓட்டுனர் காரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் விரைந்து வந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Palaavaram #Road accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story