×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிவேகமாக வந்த கார் மினி வேன் மீது மோதி விபத்து.... சிறுவன் உட்பட 3 பேர் பலி!!

அதிவேகமாக வந்த கார் மினி வேன் மீது மோதி விபத்து.... சிறுவன் உட்பட 3 பேர் பலி!!

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கழுவன் பொட்டல் கிராமத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், நேற்று விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது மினி வேன் அருப்புக்கோட்டை அருகே உள்ள புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் மினி வேன் மீது மோதியுள்ளது.அதில் மினி வேன் சாலையோரம் உள்ள ஓடைப்பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த பெருமாளக்காள் (50), புவித்ரா (12), நிதிமாறன் (4) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arupukottai #Road accident #3 members died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story