×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விவசாயிகளின் பல வருட கனவு நிறைவேற போகிறது! அமைச்சருக்கு நன்றி கூறும் பொதுமக்கள்!

river improvement in pudhukottai.

Advertisement

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல வருடம் கோரிக்கையும் சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையுமாக,  காவிரி படுகையை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பழைய வழித்தடங்களை புதுப்பித்து தருமாறு பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தனர். 

இந்தநிலையில் மாயனூரில் இருந்து( கரூர் மாவட்டம்), திருச்சி மாவட்டம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி நீர் பாசனம் இல்லாத ஆறுகளில் இணைப்பதற்கு தமிழக அரசு 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது. 

இதன் மூலம் கோடிக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதுகாக்கப்படும். இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும். மேலும் அந்த மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த அரசு ஆணை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

 இந்த அரசாணையை பிறப்பிக்க உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும்,  தமிழக அரசுக்கும்,  அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசிடம் முறையான வழியில் எடுத்துச் சென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி கூறுகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#river #pudukkottai #farmers
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story