×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடல் அழுகிய நிலையில் சுஜித் சடலமாக மீட்பு: 80 மணிநேர மீட்பு பணி தோல்வியில் முடிந்தது.

RIP Sujith

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 . 45 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன் சுஜித் இறந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 80 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றுவந்த மீட்பு பணிகள் தோல்வி அடைந்துள்ளது.

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறுகையில்: நேற்று இரவு 10.30 மணிக்கே ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், இதனால் பேரிடர் மீட்பு குழுவின் வழிகாட்டுதல் படி இடுக்கி போன்ற அமைப்புடன் குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மேல தூக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தை எப்போது இறந்தது என்பது தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Save Sujith #RIP Sujith
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story