×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் இளைஞர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் இளைஞர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

Advertisement

ஈரோடு மாவட்டம் சிறுமுகை பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் வீட்டில் உறவினர் அருண்குமார் என்பவர் தங்கியுள்ளார். நட்பாக பழகி வந்ததால் குடும்பத்தில் ஒருவரை போல பார்த்துள்ளனர்.

வீட்டில் தங்கி இருந்த அருண்குமார் சிறுமிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து ஆசையை தூண்டியுள்ளார். மேலும் அருண்குமார் சிறுமிக்கு பொருட்களை வாங்கி கொடுப்பது சிறுமியின் பெற்றோருக்கு தெரியாது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அருண்குமார் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அருண்குமாரை போக்ஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #harassment #Crime #arrest #Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story