தமிழகத்துக்கும் "ரெட் அலர்ட்"!. மக்களே உஷார்!.
தமிழகத்துக்கும் ரெட் அலர்ட்!. மக்களே உஷார்!.
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அடைமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக்தில் அக்டோபர் 7-ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362