அதிமுக எம்.பி.க்கள் இருவர் திடீர் ராஜினாமா!! ராஜினாமா செய்ய என்ன காரணம் தெரியுமா??
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், முனுசாமி 
எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க இருக்கும் அதிமுக எம்.பி.க்கள் வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி இருவரும் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றிபெற்றது. தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றிபெற்ற திமுக 10 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க இருக்கும் நிலையில், அதிமுக சார்பாக ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் அவர்களும், வேப்பனஹல்லி தொகுதியில் இருந்து முனுசாமி அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நாளை எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க உள்ளனர்.
அதேநேரம் இவர்கள் இருவரும் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளனர். நாளை வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362