×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடைந்த பீர் பாட்டிலின் முனையில் 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்! பதறிப்போய் துடித்த சிறுமியின் தாய்!

Rape velur

Advertisement

வேலூர் மாவட்டம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கழிவறை இல்லாததால் இரவு 7 மணியளவில் அருகில் உள்ள தோப்பு பகுதிக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பும் வழியில் மூன்று பேர் சிறுமி வரும் வழியில் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.

இதனால் அந்த சிறுமி வேறு வழியாக சென்று விடலாம் என்று நினைத்து செல்ல முயன்ற போது மூன்று பேரும் சிறுமியை துரத்தி பிடித்து அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் வைத்து உடைந்த பீர் பாட்டிலின் முனையில் கூட்டு பாலியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியின் ஆடைகளை சுக்கு நூறாக கிழித்து வீசி சென்றுள்ளனர். பின்னர் ஆடையில்லாமல் தவித்த சிறுமி சுடுகாட்டில் கிடந்த வேட்டியை எடுத்து சுற்றி கொண்டு வந்து வீட்டில் இருந்த தன் தாயிடம் கூறியுள்ளது.

பதறிப்போன தாய் உடனே தனது குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு, பின் போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கூட்டு பாலியலில் ஈடுப்பட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rape #velur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story