குளத்தில் 6 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!
குளத்தில் 6 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், கோணலம் கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பதி (வயது 35). இவர் கூலித் தொழிலாளி.
ஆவார் இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 6 வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருக்கிறார். சிறுவன் கமலேஷ் அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.
இதையும் படிங்க: Ranipet: கொடிக்கம்பம் மின்சார கம்பியில் உரசி சோகம்; கூலித் தொழிலாளி பரிதாப மரணம்.!
ஒன்றாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன், அங்குள்ள குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார்.
சிறுவன் மரணம்
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் - பக்கத்தினர், சிறுவனை மீட்க முயற்சித்தனர். எனினும், சிறுவனை மீட்க முடியவில்லை.
சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிரிவலத்தில் நடந்த சோகம்; வழிதவறிய பெண் நெஞ்சு வலியால் மரணம்.!