×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் குடிவெறி.. குடியால் வந்த விபரீதம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் குடிவெறி.. குடியால் வந்த விபரீதம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

Advertisement

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். அந்த வகையில் சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் குடிபோதை தலைக்கேறி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சின்னம்மாபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால்  இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மனைவி பிரிந்து சென்ற பிறகு சதீஷ்குமார் இன்னும் அதிகமாக குடித்து வந்துள்ளார். மேலும் சம்பவத்தன்று தான் தங்கி இருந்த வீட்டின் மாடியில் இருந்து குடிபோதையில் சதீஷ்குமார் தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக பலியானார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் குதித்தாரா அல்லது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young man #died #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story