×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படையப்பா நீலாம்பரியை மிஞ்சிய முரட்டு காதல்... 20 ஆண்டுகள் கழித்து காதலனுக்கு வெட்டு... பரபரப்பு வாக்குமூலம்.!

படையப்பா நீலாம்பரியை மிஞ்சிய முரட்டு காதல்... 20 ஆண்டுகள் கழித்து காதலனுக்கு வெட்டு... பரபரப்பு வாக்குமூலம்.!

Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில்  நடுத்தர வயது இளைஞர் ஒருவர் பெண்ணால் வெட்டப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் கூறிய வாக்குமூலம்  காவல்துறையினரையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரை பெண் ஒருவர் அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து மாணிக்கத்தை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிரேஸ் என்ற பெண் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில்  அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பான வாக்குமூலம் அளித்திருக்கிறார் கிரேஸ்.

அந்த வாக்குமூலத்தில் கிரேசும் மாணிக்கமும் 20 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்ததாகவும்  அப்போது கிரேஸை திருமணம் செய்து கொள்ளாமல் மாணிக்கம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் 20 வருடங்களாக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கிரேஸ். தனது காதல் காரணமாக மாணிக்கத்தை  தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #ramnad #woman attack lover #20 years of love #Confession
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story