×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிக்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.!

குடிக்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.!

Advertisement

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புண்டி மாவட்டம், போப்பா கி ஹாப்டியன் கிராமத்தை சேர்ந்தவர் பன்வாரி மீனா என்ற பண்ணே சிங். இவரின் கணவர் கமலேஷ் (வயது 35).

மதுபோதைக்கு அடிமையான கமலேஷ், அவ்வப்போது தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு மிரட்டி தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதனிடையே, சம்பவத்தன்று கமலேஷ் தனது மனைவி மீனாவிடம் குடிக்க பணம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். அவர் பணம் தர மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கமலேஷ் தனது மனைவியை வீட்டில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தக்வல் அறிந்த காவல் துறையினர் மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மீனாவின் கணவர் கமலேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajasthan #Murder #Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story