×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த 24  மணிநேரத்தில் இங்கெல்லாம் இடிமின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

அடுத்த 24  மணிநேரத்தில் இங்கெல்லாம் இடிமின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Advertisement

தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவானது, கடலூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டையில் தலா 5  சென்டிமீட்டரம், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரையில் தலா 9 சென்டிமீட்டரும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் தலா 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #alert #Warning #meotrological
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story