இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்க போகுது!! வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் 29,30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 2
தமிழகத்தில் 29,30-ம் தேதிகளில் ஒருசில மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வாணியை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதியில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வரும் 29 ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசியிலும், 30 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூரிலும் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362