×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்க போகுது!! வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் 29,30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 2

Advertisement

தமிழகத்தில் 29,30-ம் தேதிகளில் ஒருசில மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வாணியை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதியில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வரும் 29 ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசியிலும், 30 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூரிலும் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #Rain update
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story